13
Sunday
April, 2025

A News 365Times Venture

'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்சரிக்கும் ட்ரம்ப்!

Date:

‘ட்ரம்ப்பின் பரஸ்பர வரி’ – இது தான் பொருளாதார உலகின் தற்போதைய‌ ஹாட் டாப்பிக்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்கைக்கு அதிரடி காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்க பரஸ்பர வரி பட்டியலில், சீனப் பொருட்கள் மீது 34 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா – மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!

சீனாவின் எதிர்வினை

இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது சீனா. நேற்று, சீனாவின் நிதி அமைச்சகம், “சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது” என்று அறிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் பதில்

சீனாவின் இந்த வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், “சீனா தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் பயந்துவிட்டனர். அது தான் அவர்களால் கடைசிக்கு செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.പി.ഐക്ക് പിന്നാലെ പണി തന്ന് വാട്‌സ്ആപ്പും; ആഗോളതലത്തില്‍ വെട്ടിലായി ഉപയോക്താക്കള്‍

സാന്‍ഫ്രാന്‍സിസ്‌കോ: യു.പി.ഐ പേമെന്റ് ആപ്പുകള്‍ പണിമുടക്കിയതിന് പിന്നാലെ സമൂഹമാധ്യമമായ വാട്‌സ്ആപ്പിനും സാങ്കേതിക...

விருதுநகர்: "கிராமத்தைக் காணவில்லை; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு" – திடீர் போஸ்டரின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர் பகுதி முழுவதும் சினிமா படப் பாணியில்...

Pune: వీడేం మనిషి.. కుక్కపై అత్యాచారం..

Pune: పూణేలోని హండేవాడి ప్రాంతంలో ఆడ కుక్కపై అత్యాచారం చేసినందుకు 20...

ಇಬ್ಬರು ಮಕ್ಕಳಿಗೆ ವಿಷ ಹಾಕಿ ತಾನೂ ಆತ್ಮಹತ್ಯೆಗೆ ಯತ್ನಿಸಿದ ತಾಯಿ: ಸ್ಥಿತಿ ಗಂಭೀರ

ಧಾರವಾಡ,ಏಪ್ರಿಲ್,12,2025 (www.justkannada.in): ತಾಯಿ ತನ್ನ ಇಬ್ಬರು ಮಕ್ಕಳಿಗೆ ವಿಷ ಹಾಕಿ...