16
Sunday
March, 2025

A News 365Times Venture

ஒன் பை டூ

Date:

செ.கிருஷ்ணமுரளி

சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்… அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்ததற்கெல்லாம் கண்டன அறிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார் திருமாவளவன். இப்போது ஸ்டாலின் தலைமையிலான இந்தப் போலி திராவிட மாடல் அரசில், என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார் திருமா. இந்த நிலையில், ‘வேங்கைவயல் விவகாரத்தில் அ.தி.மு.க எதுவுமே செய்யவில்லை’ என்று பொய் பேசும் திருமா, முதலில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். சாம்சங் போராட்டம், செய்யாறு சிப்காட், பரந்தூர் விமான நிலைய விவகாரங்களிலும் தி.மு.க அரசின் மோசமான போக்கைக் கண்டித்துப் பேசக்கூட திருமாவுக்குத் துணிவில்லை. மாறாக, தி.மு.க அரசின் போலிச் சாதனைகளை விளம்பரம் செய்வதில் தி.மு.க-வினரை மிஞ்சும் அளவுக்கு வி.சி.க-வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன. திருமா நடந்துகொள்வதையெல்லாம் பார்த்தால், சீட்டுக்காக மொத்தக் கட்சியையும் தி.மு.க-விடம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!”

வன்னி அரசு

துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க

“உளறிக்கொட்டுகிறார் ஜெயக்குமார். கடந்தகாலத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, பா.ஜ.க-வுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் அ.தி.மு.க-வினர். அவர்களுக்கு எங்கள் தலைவரை விமர்சிக்கத் துளியளவும் அருகதை கிடையாது. மத்திய பா.ஜ.க அரசு, 370-வது பிரிவை நீக்கும்போதும்கூட ‘காஷ்மீர் நல்ல காஷ்மீர்…’ என்று கூட்டணியில் இருந்துகொண்டு பாட்டுப் பாடினார்கள். ‘அமித் ஷாவுக்காக ஆதரவு தருகிறோம்’ என்று பா.ஜ.க-வின் தொங்கு சதையாகவே மாறிப்போனார்கள். பா.ஜ.க கூட்டணியைவிட்டு விலகி வந்த பிறகும்கூட, ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது விமர்சனங்களைவைக்க அஞ்சுகிறார் பழனிசாமி. ‘கண்டனம்’ என்ற ஒரு வார்த்தைகூட இல்லாமல், கண்டன அறிக்கை எழுதுகிற ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. ஆனால், வேங்கைவயல், நாங்குநேரிச் சம்பவங்களுக்கு எதிராக முதல் கண்டனத்தைப் பதிவுசெய்தது எங்கள் தலைவர்தான். கூட்டணிக்காகக் குழைந்து கும்பிடுபோட நாங்கள் ஒன்றும் முதுகெலும்பில்லாத அ.தி.மு.க-வினர் கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எனவே, வி.சி.க குறித்துப் பொய் பேசுவதை விட்டுவிட்டு அழிந்துகொண்டிருக்கும் அ.தி.மு.க-வைக் காப்பாற்றப் பாருங்கள்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯತೀಂದ್ರರ ಕಾಲಜ್ಞಾನ ಕೃತಿ ಸರ್ವಕಾಲಕ್ಕೂ ಪ್ರಸ್ತುತ: ಎಚ್.ಎ.ವೆಂಕಟೇಶ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,15,2025 (www.justkannada.in): ಯತೀಂದ್ರರವರು ರಚಿಸಿದ ಕಾಲಜ್ಞಾನದ ಕೃತಿಯಲ್ಲಿ ಎಲ್ಲಾ ಸಂದೇಶವು...

ഹോളി കളര്‍ ശരീരത്തിലാക്കാന്‍ സമ്മതിച്ചില്ല; യു.പിയില്‍ മുസ്‌ലിം യുവാവിനെ അടിച്ചുകൊന്ന് അക്രമികള്‍

ലഖ്നൗ: ഉത്തര്‍പ്രദേശില്‍ ഹോളി കളര്‍ ശരീരത്തിലാക്കാന്‍ വിസമ്മതിച്ചതിന് മുസ്‌ലിം യുവാവിനെ അടിച്ചുകൊന്ന്...

Chennai: ரூ.2,000 மாதக் கட்டணம்; ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்கலாம்..!

இப்பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணிக்கிறார்கள். அலுவலகம் செல்வோருக்கு வசதியாக...

Emergency Landing: శంషాబాద్ ఎయిర్‌పోర్టులో విమానం అత్యవసర ల్యాండింగ్..

శంషాబాద్ రాజీవ్ గాంధీ ఇంటర్నేషనల్ ఎయిర్‌పోర్టులో విమానం అత్యవసర ల్యాండింగ్ అయింది....