3
Monday
March, 2025

A News 365Times Venture

Thirumavalavan : 'எந்த அரசியல் கணக்கும் இல்லை!' – ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்!

Date:

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜூனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்புக்குப் பிறகு, ‘இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை, முடிச்சும் இல்லை!’ என திருமாவளவன் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.

ஆதவ்

திருமாவளவன் பேசுகையில், ‘ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

களத்தில் எவ்வளவு முரண்பட்டாலும் அதை பகையாக நினைக்கக்கூடாது. சில பேர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் தலைமையின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆதவ் அப்படியெல்லாம் செய்யவில்லை. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை பேசக்கூடிய இயக்கமாக தவெக இருக்கிறது. விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது.

திருமா

இதனால் நான் மனப்பூர்வமாக தவெகவில் இணைந்திருக்கிறேன் எனும் விளக்கத்தை ஆதவ் தந்தார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தவெக சார்பில் பெரியாரின் கொள்கைகளைத்தான் உயர்த்திப் பிடிப்போம் என ஆதவ் சொன்னார். எங்களுக்கு எந்த அரசியல் கணக்கும் இல்லை. முடிச்சும் இல்லை.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರಾಜ್ಯ ಅಭಿವೃದ್ದಿಯಾಗಿಲ್ಲ, ಕೇವಲ ಕಾಂಗ್ರೆಸ್ ಅಭಿವೃದ್ಧಿಯಾಗಿದೆ- ಆರ್.ಅಶೋಕ್ ಕಿಡಿ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,3,2025 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಅಭಿವೃದ್ಧಿಯಾಗಿಲ್ಲ ಕೇವಲ ಕಾಂಗ್ರೆಸ್ ಮಾತ್ರ ಅಭಿವೃದ್ಧಿಯಾಗಿದೆ...

ഇറാന്‍ വൈസ് പ്രസിഡന്റ് മുഹമ്മദ് ജവാദ് സരീഫ് രാജിവെച്ചു

ടെഹ്‌റാന്‍: ധനമന്ത്രിക്ക് പിന്നാലെ ഇറാനിയന്‍ വൈസ് പ്രസിഡന്റ് മുഹമ്മദ് ജവാദ് സരീഫ്...

திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் – சிரமத்தில் மக்கள்!

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன....

Supreme Court: అంధులు కూడా న్యాయమూర్తులు కావచ్చు.. సుప్రీంకోర్టు చారిత్రాత్మక తీర్పు

దృష్టిలోపం ఉండి న్యాయ సేవలోకి రావాలనుకునే వారికి బిగ్ రిలీఫ్. దేశ...